×

வத்தலக்குண்டுவில் செல்போன் திருடிய 5 பேர் கைது: அரை மணிநேரத்தில் பிடித்தனர்

 

வத்தலக்குண்டு, ஏப். 26: வத்தலகுண்டு காந்தி நகரை சேர்ந்தவர் ராஜேஷ் கண்ணா. இவர் வத்தலக்குண்டு- திண்டுக்கல் சாலையில் கார் ஒர்க்ஷாப் வைத்துள்ளார். இவர் நேற்று தனது தம்பி நித்திஷ் உடன் பொருட்கள் வாங்க கடைவீதி செல்வதற்காக பஸ் நிலையத்தில் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது டூவீலரில் வந்த மர்மநபர், நித்திஷ் சட்டை பையில் வைத்திருந்த செல்போனை பறித்து கொண்டு கண்ணிமைக்கும் நேரத்திற்குள் மாயமானார். இதுகுறித்து ராஜேஷ் கண்ணா அளித்த புகாரின் பேரில் வத்தலக்குண்டு இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று தேடினர். அப்போது டென்னிஸ் கிளப் சாலையில் ஒரு டாஸ்மாக் கடையருகே சந்தேகப்படும் வகையில் நின்று கொண்டிருந்த 5 பேரை பிடித்துவிசாரணை செய்தனர். அதில் அவர்கள் செல்போன் திருடர்கள் என்பது தெரியவந்தது.

விசாரணையில் பஸ் நிலையத்தில் செல்போன் பறித்தது பெரியகுளம் அருகே தாமரைக்குளத்தை சேர்ந்த பிரகாஷ் (19) என்பதும், மற்றவர்கள் வத்தலக்குண்டுவை சேர்ந்த முஜாசிட் (24), சின்னாளபட்டியை ஜெகன் (22), பெரியகுளத்தை சேர்ந்த புவனேஸ்வரன் (25), 17 வயது சிறுவன் என்பதும் தெரியவந்தது. மேலும் விசாரணையில் இவர்கள் செல்போன்களை திருடி மது குடிப்பது உள்பட பல்வேறு கேளிக்கைகளில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் 5 பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்த ஒரு டூவீலர், 2 செல்போன்களை பறிமுதல் செய்தனர். மேலும் இவர்களுக்கு மற்ற ஊர்களில் உள்ள செல்போன் திருடர்களுக்கும் தொடர்பு உள்ளதா எனவும் போலீசார் விசாரித்து வருகின்றனர். புகார் கொடுத்த அரை மணிநேரத்தில் செல்ேபான் திருடர்களை கைது செய்த போலீசாரை பொதுமக்கள் பாராட்டினர்.

The post வத்தலக்குண்டுவில் செல்போன் திருடிய 5 பேர் கைது: அரை மணிநேரத்தில் பிடித்தனர் appeared first on Dinakaran.

Tags : wathalakundu ,Vathalakungu ,Rajesh Kanna ,Vathalakundi ,Gandhi ,Vathalakundu- Didigul Road ,
× RELATED செங்கல்பட்டு அருகே விநாயகர் சிலைக்கு...